search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்
    X

    சீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்

    அசாமில் நடைபெற உள்ள 83வது சீனியர் தேசிய பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு பிவி சிந்து முன்னேறியுள்ளார். #PVSindhu
    கவுகாத்தி:

    அசாம் தலைநகர் கவுகாத்தியில் 83-வது சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், முதலாம் தரநிலை வீராங்கனையான பி.வி.சிந்து, அசாமைச் சேர்ந்த அஷ்மிதா சலிகாவை எதிர்த்து விளையாடினார்.

    துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 21-10 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட் ஆட்டத்தில் சிந்து 16-19 எனும் செட் கணக்கில் சற்று பின்தங்கினார். பின்னர் போராடி அந்த செட்டை 22-20 என கைப்பற்றினார். இதனால், 21-10, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



    முன்னதாக தரவரிசையில் இரண்டாவதாக இருக்கும் சாய்னா நேவால், பருபள்ளி காஷ்யப் மற்றும் சவுசப் வர்மா ஆகியோர் தங்கள் காலிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். இந்த காலிறுதிப் போட்டியில் சாய்னா, தன்னை எதிர்த்து விளையாடிய மகாராஷ்டிராவின் நேகா பண்டிட்டை 21-10, 21-10 எனும் செட் கணக்கில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #PVSindhu  

    Next Story
    ×