
ஆனால், பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும் என தெரிவித்தார்.
ஐபிஎல் தொடர் மார்ச் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் அட்டவணை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை வெளியிட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.