என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோ ரூட்டை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் எச்சரிக்கையுடன் தப்பினார்
Byமாலை மலர்12 Feb 2019 11:38 AM GMT (Updated: 12 Feb 2019 11:38 AM GMT)
செயின்ட் லூசியாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் ஜோ ரூட்டை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் தண்டனையில் இருந்து தப்பித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 209 பந்தில் 111 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் துள்ளியமாக பந்து வீசினார். ஆனால் ஜோ ரூட் அந்த பந்துகளில் ஆட்டமிழக்காமல் தப்பினார். இதனால் விரக்தியடைந்த கேப்ரியல் ஜோ ரூட்டை பார்த்து முனுமுனுத்தார். போட்டியை பார்தத ரசிகர்களுக்கு அவர் ஏதோ திட்டினார் என்பது தெரிந்தது. ஆனால் என்ன வார்த்தை சொல்லி திட்டினார் என்பது புரியவில்லை. மேலும், மைக் ஸ்டம்பில் கேப்ரியல் பேசியது பதிவாகவில்லை.
போட்டி முடிந்த பின்னர், ஜோ ரூட்டிடம் இதுகுறித்து கேட்டதற்கு, களத்தில் நடந்தது பற்றி கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனால் கேப்ரியல் நடுவரின் எச்சரிக்கையுடன் தப்பினார். ஒருவேளை மைக் ஸ்டம்பில் பேச்சு பதிவாகியிருந்தால் ஐசிசி-யின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் துள்ளியமாக பந்து வீசினார். ஆனால் ஜோ ரூட் அந்த பந்துகளில் ஆட்டமிழக்காமல் தப்பினார். இதனால் விரக்தியடைந்த கேப்ரியல் ஜோ ரூட்டை பார்த்து முனுமுனுத்தார். போட்டியை பார்தத ரசிகர்களுக்கு அவர் ஏதோ திட்டினார் என்பது தெரிந்தது. ஆனால் என்ன வார்த்தை சொல்லி திட்டினார் என்பது புரியவில்லை. மேலும், மைக் ஸ்டம்பில் கேப்ரியல் பேசியது பதிவாகவில்லை.
போட்டி முடிந்த பின்னர், ஜோ ரூட்டிடம் இதுகுறித்து கேட்டதற்கு, களத்தில் நடந்தது பற்றி கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனால் கேப்ரியல் நடுவரின் எச்சரிக்கையுடன் தப்பினார். ஒருவேளை மைக் ஸ்டம்பில் பேச்சு பதிவாகியிருந்தால் ஐசிசி-யின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X