search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு அஸ்வின் கேப்டன்
    X

    சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு அஸ்வின் கேப்டன்

    இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட்டான சையத் முஸ்தாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். #Ashwin
    சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை சூரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபரஜித் ஆகியோர் இடம் பெறவில்லை. இதுகுறித்து தேர்வாளர் ஒருவர் கூறும்போது, ‘‘முரளி விஜய், அபினவ் முகுந்த், அபரஜித் ஆகியோர் தங்களது திறமைகளை நிரூபித்த வீரர்கள்.

    எனவே புதிய வீரர்களை களம் இறக்க விரும்புகிறோம். சுழற்பந்து வீச்சாளர் வருண் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை என்றார்.

    தமிழ்நாடு அணி வருமாறு:-

    அஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணைக்கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், நடராஜன், முகமது, கவுசிக், சாய்கிஷோர், முருகன் அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.
    Next Story
    ×