என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
Byமாலை மலர்7 Feb 2019 9:29 AM GMT (Updated: 7 Feb 2019 9:29 AM GMT)
செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. #SAvPAK
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் (23), பகர் சமான் (17) ஓரளவு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களும், கேப்டன் சோயிப் மாலிக் 18 ரன்களும் சேர்த்தனர்.
சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 8 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிக்ஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹென்ரிக்ஸ் (5), மலன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டஸ்சன் 35 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.
டஸ்சன்
அதன்பின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 29 பந்தில் 55 ரன்கள் விளாசினாலும், தென்ஆப்பிரிக்காவால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் பாகிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 3 விக்கெட்டும் சதாப் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் (23), பகர் சமான் (17) ஓரளவு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களும், கேப்டன் சோயிப் மாலிக் 18 ரன்களும் சேர்த்தனர்.
சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 8 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிக்ஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹென்ரிக்ஸ் (5), மலன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டஸ்சன் 35 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.
டஸ்சன்
அதன்பின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 29 பந்தில் 55 ரன்கள் விளாசினாலும், தென்ஆப்பிரிக்காவால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் பாகிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 3 விக்கெட்டும் சதாப் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X