search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். #NZvIND
    வெலிங்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), தவான், டோனி, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல், கலீல் அகமது, குருணால் பாண்டியா, புவனேஸ்வர்குமார்.

    நியூசிலாந்து:- கொலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், மிச்செல், கிராண்ட்ஹோம், சவுத்தி, சான்ட்னெர், ஸ்காட், சோதி, பெர்குசன். #NZvIND
    Next Story
    ×