என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா டி20 தொடர்: பெங்களூரு, விசாகப்பட்டினம் போட்டிக்கான தேதிகள் மாற்றம்
Byமாலை மலர்3 Feb 2019 12:08 PM GMT (Updated: 3 Feb 2019 12:08 PM GMT)
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் பெங்களூரு, விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் டி20 போட்டிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
முதலில் டி20 போட்டிகள் பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுவதாக இருந்தது. முந்தைய அட்டவணைப்படி முதல் போட்டி வருகிற 24-ந்தேதி பெங்களூருவிலும், 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் 27-ந்தேதியும் நடப்பதாக இருந்தது.
ஆனால், பிப்ரவரி 24-ந்தேதி பெங்களூருவில் இந்திய விமானப்படை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆகையால் போட்டிக்கு பாதுகாப்பு வழங்குவது கடினம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கர்நாடக கிரிக்கெட் சங்கம் 24-ந்தேதி பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, முதல் போட்டியை 24-ந்தேதி விசாகப்பட்டினத்திற்கும், 2-வது போட்டியை 27-ந்தேதி பெங்களூருவுக்கும் மாற்றியுள்ளது.
முதலில் டி20 போட்டிகள் பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுவதாக இருந்தது. முந்தைய அட்டவணைப்படி முதல் போட்டி வருகிற 24-ந்தேதி பெங்களூருவிலும், 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் 27-ந்தேதியும் நடப்பதாக இருந்தது.
ஆனால், பிப்ரவரி 24-ந்தேதி பெங்களூருவில் இந்திய விமானப்படை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆகையால் போட்டிக்கு பாதுகாப்பு வழங்குவது கடினம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கர்நாடக கிரிக்கெட் சங்கம் 24-ந்தேதி பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, முதல் போட்டியை 24-ந்தேதி விசாகப்பட்டினத்திற்கும், 2-வது போட்டியை 27-ந்தேதி பெங்களூருவுக்கும் மாற்றியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X