search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிஸ் கோப்பை- தகுதிச்சுற்றில் இத்தாலியிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா
    X

    டேவிஸ் கோப்பை- தகுதிச்சுற்றில் இத்தாலியிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா

    டேவிஸ் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, இத்தாலியிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. #DavisCup #DavisCupQualifiers
    கொல்கத்தா:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், கொல்கத்தாவில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா- இத்தாலி அணிகள் மோதின. 

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார் ஆகியோர் தோல்வி அடைந்தனர். இதனால் இத்தாலி 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இன்று நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டினி-சிமோனி போலல்லி ஜோடியை 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்பின்னர் மாற்று ஒற்றையர் பிரிவில், ஒரு போட்டியில் குன்னேஸ்வரன் தோல்வி அடைந்தார்.

    இதன்மூலம் 3-1 என இத்தாலி வலுவான முன்னிலை பெற்றதால், மற்றொரு மாற்று ஒற்றையர் போட்டி நடத்தப்படவில்லை. இத்தாலி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் நவம்பர் மாதம் இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 18 நாடுகளின் அணிகள் பங்கேற்கும். #DavisCup #DavisCupQualifiers
    Next Story
    ×