search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி  காக்
    X
    டி காக்

    பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரை 3-2 எனக்கைப்பற்றியது

    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று பகல்-இரவாக ஆட்டமாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 241 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர் பகர் சமான் 70 ரன்னும், இமாத் ஹசிம் 47 ரன்னும் எடுத்தனர். பிரிடோரியஸ், பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டும், ஸ்டெயின், ரபாடா, முல்டர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் 58 பந்தில் 83 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் டு பிளிசிஸ், வான்டர் டஸ்சன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 50 ரன்கள எடுத்தனர். முகமது அமீர், உஸ்மான் ஷின்வாரி, ‌ஷஹீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.


    டு பிளிசிஸ்

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே 2-வது, 3-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. பாகிஸ்தான் முதல் மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. முதல் ஆட்டம் கேப்ட வுனில் நாளை நடக்கிறது.
    Next Story
    ×