search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேச பிரிமீயர் லீக்கில் 50 பந்தில் சதம் விளாசினார் ஏபி டி வில்லியர்ஸ்
    X

    வங்காளதேச பிரிமீயர் லீக்கில் 50 பந்தில் சதம் விளாசினார் ஏபி டி வில்லியர்ஸ்

    வங்காளதேச பிரிமீயர் லீக்கில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 50 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். #ABD #BPL
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. ரங்க்பூர் ரைடர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    முதலில் பேட்டிங் செய்த டாக்கா டைனமைட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோசவ் களம் இறங்கினார். இவர் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். இதனால் 5 ரன்னுக்குள் 2-வது விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமாக விளையாடினார்கள்.



    ஏபி டி வில்லியர்ஸ் 50 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் சரியாக 100 ரன்கள் குவித்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 53 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 85 ரன்கள் விளாச ரங்க்பூர் ரைடர்ஸ் 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க 189 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×