search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    19 வயதில் ஷுப்மான் கில் செய்ததில் 10 சதவீதம் கூட நான் செய்ததில்லை: விராட் கோலி புகழாரம்
    X

    19 வயதில் ஷுப்மான் கில் செய்ததில் 10 சதவீதம் கூட நான் செய்ததில்லை: விராட் கோலி புகழாரம்

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் களம் இறங்க இருக்கும் ஷுப்மான கில்லுக்கு விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli
    நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா தொடர், தற்போது மூன்று போட்டிகள் என தொடர்ச்சியாக விளையாடியதால் விராட் கோலிக்கு கடைசி இரண்டு ஒருநாள் போட்டியிலும், டி20 தொடரிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் 4-வது போட்டியில் இளம் வீரரான ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வருவது குறித்து விராட் கோலி பதில் அளித்தார்.

    அப்போது ஷுப்மான் கில்லுக்கு புகழாரம் சூட்டினார். ஷுப்மான் கில் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சில இளம் வீரர்கள் மிகவும் அபாரமான திறமையை பெற்றுள்ளனர். பிரித்வி ஷா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் இடம்பிடித்து விட்டார். ஷுப்மான் கில் மிகவும் அற்புதமான திறமையை பெற்றுள்ளார். வலைப்பயிற்சியின்போது அவரது ஆட்டத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன். நான் 19 வயதில் இருக்கும்போது ஷுப்மான கில் செய்ததில் 10 சதவீதம் கூட செய்ததில்லை.

    அவர்கள் இந்திய அணிக்கு வருவது கிரிக்கெட்டிற்கு சிறப்பானது. சிறப்பான தகுதியுடன் இந்திய அணிக்கு வரும்போது, அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாலும், வளர்ச்சி வாய்ப்பு வழங்கப்படுவதாலும் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×