search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச தடை: ஐசிசி அதிரடி
    X

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச தடை: ஐசிசி அதிரடி

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது. #ICC #AmbatiRayudu
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு. பகுதி நேர பந்து வீச்சாளரான இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார்.

    அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு, தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்திருந்தது.

    ஆனால் இன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. இதனால் 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி அதிரடி தடைவிதித்துள்ளது. இனிமேல் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச இயலாது. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பந்து வீசலாம்.
    Next Story
    ×