என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைகிறார் ஹர்திக் பாண்டியா: இந்தியா ‘ஏ’ அணியில் கேஎல் ராகுல்
Byமாலை மலர்25 Jan 2019 8:00 AM GMT (Updated: 25 Jan 2019 8:00 AM GMT)
தடை நீக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைய இருக்கிறார். இந்தியா ‘ஏ’ அணியில் கேஎல் ராகுல் சேர்கிறார். #HardikPandya
இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான சர்ச்கைக்குரிய கருத்துக்களை கூறியதாக விமர்சனம் எழும்பியது. இதனால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டு சொந்த நாடு திரும்பினர். இந்நிலையில் நேற்று இருவர் மீதான தடை நீக்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகக்குழு அதிகாரி வினோத் ராய் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை நியூசிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் இணையும்படி பிசிசிஐ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து செல்கிறார். நாளை நடக்கும் 2-வது போட்டிக்கான இந்திய அணியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை மவுண்ட் மவுங்கானுயில் 28-ந்தேதி நடைபெறும் 3-வது போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
அதேசமயம் லோகேஷ் ராகுலை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்தியா ‘ஏ’ அணியும் சேரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டு சொந்த நாடு திரும்பினர். இந்நிலையில் நேற்று இருவர் மீதான தடை நீக்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகக்குழு அதிகாரி வினோத் ராய் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை நியூசிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் இணையும்படி பிசிசிஐ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து செல்கிறார். நாளை நடக்கும் 2-வது போட்டிக்கான இந்திய அணியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை மவுண்ட் மவுங்கானுயில் 28-ந்தேதி நடைபெறும் 3-வது போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
அதேசமயம் லோகேஷ் ராகுலை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்தியா ‘ஏ’ அணியும் சேரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X