search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைகிறார் ஹர்திக் பாண்டியா: இந்தியா ‘ஏ’ அணியில் கேஎல் ராகுல்
    X

    நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைகிறார் ஹர்திக் பாண்டியா: இந்தியா ‘ஏ’ அணியில் கேஎல் ராகுல்

    தடை நீக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைய இருக்கிறார். இந்தியா ‘ஏ’ அணியில் கேஎல் ராகுல் சேர்கிறார். #HardikPandya
    இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான சர்ச்கைக்குரிய கருத்துக்களை கூறியதாக விமர்சனம் எழும்பியது. இதனால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டு சொந்த நாடு திரும்பினர். இந்நிலையில் நேற்று இருவர் மீதான தடை நீக்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகக்குழு அதிகாரி வினோத் ராய் தெரிவித்தார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை நியூசிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் இணையும்படி பிசிசிஐ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து செல்கிறார். நாளை நடக்கும் 2-வது போட்டிக்கான இந்திய அணியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை மவுண்ட் மவுங்கானுயில் 28-ந்தேதி நடைபெறும் 3-வது போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

    அதேசமயம் லோகேஷ் ராகுலை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்தியா ‘ஏ’ அணியும் சேரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×