search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மயாங்க் அகர்வால், கருண் நாயர் ஏமாற்றம்- கர்நாடகா 264/9
    X

    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மயாங்க் அகர்வால், கருண் நாயர் ஏமாற்றம்- கர்நாடகா 264/9

    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மயாங்க் அகர்வால், கருண் நாயர் ஏமாற்றம் அளிக்க மணிஷ் பாண்டே, கோபால், ஷரத் ஆட்டத்தில் கர்நாடகா 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கார்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது.

    சவுராஷ்டிராவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் சமர்த் (0), மயாங்க் அகர்வால் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த சித்தார்த் 12 ரன்னிலும், கருண் நாயர் 9 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    இதனால் கர்நாடகா 30 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் மணிஷ் பாண்டே உடன் ஷ்ரேயாஸ் கோபால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கர்நாடகாவை சரிவில் இருந்து மீட்டது.

    அணியின் ஸ்கோர் 136 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் கோபால் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    விக்கெட் கீப்பர் ஷரத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ஷரத் 74 ரன்களுடனும், மோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    சவுராஷ்டிரா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் நான்கு விக்கெட்டுக்களும், சுழற்பந்து வீச்சாளர் கம்லேஷ் மக்வானா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×