என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது - 700 பேர் பங்கேற்கும் மாநில தடகள போட்டி
Byமாலை மலர்24 Jan 2019 9:40 AM GMT (Updated: 24 Jan 2019 9:40 AM GMT)
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 700 பேர் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில இளைஞர் தடகள போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டி நாளையும் (25-ந்தேதி), நாளை மறுநாளும் (26-ந்தேதி) நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தபிதா (100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், நீளம் தாண்டுதல்), மணிராஜ், அரவிந்த் (டிரிபிள் ஜம்ப்), தீபிகா, ஜஸ்வர்யா (ஹெப்டத்லான்), செரீன், பபிஷா (நீளம் தாண்டுதல்), கிரிதரணி, சான்ட்ரா (100 மீட்டர் ஓட்டம்) போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து 700 பேர் பங்கேற்கிறார்கள். 44 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டியின் அடிப்படையில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 19- 21-ந்தேதி வரை நடைபெறும் 16-வது தேசிய இளைஞர் தடகள போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.
மேலும் மார்ச் 15- 17-ந்தேதி வரை ஆங்காங்கில் நடைபெறும் ஆசிய இளைஞர் தடகள போட்டிக்கான தேர்வாகவும் இந்த போட்டி இருக்கும்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #tamilnews
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில இளைஞர் தடகள போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டி நாளையும் (25-ந்தேதி), நாளை மறுநாளும் (26-ந்தேதி) நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தபிதா (100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், நீளம் தாண்டுதல்), மணிராஜ், அரவிந்த் (டிரிபிள் ஜம்ப்), தீபிகா, ஜஸ்வர்யா (ஹெப்டத்லான்), செரீன், பபிஷா (நீளம் தாண்டுதல்), கிரிதரணி, சான்ட்ரா (100 மீட்டர் ஓட்டம்) போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து 700 பேர் பங்கேற்கிறார்கள். 44 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டியின் அடிப்படையில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 19- 21-ந்தேதி வரை நடைபெறும் 16-வது தேசிய இளைஞர் தடகள போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.
மேலும் மார்ச் 15- 17-ந்தேதி வரை ஆங்காங்கில் நடைபெறும் ஆசிய இளைஞர் தடகள போட்டிக்கான தேர்வாகவும் இந்த போட்டி இருக்கும்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X