என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி
Byமாலை மலர்23 Jan 2019 1:58 PM GMT (Updated: 23 Jan 2019 1:58 PM GMT)
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’ #INDA
இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களம் பேட்டிங் செய்தது. கேப்டன் சாம் பில்லிங்ஸ் சதத்தால் (108 நாட்அவுட்) அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது.
பின்னர் இந்தியா ‘ஏ’ அணி 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரகானே 87 பந்தில் 59 ரன்கள் சேர்த்தார். அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ஆட்டமிழக்காமல் 48 பந்தில் 57 ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ அணி 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரனகள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களம் பேட்டிங் செய்தது. கேப்டன் சாம் பில்லிங்ஸ் சதத்தால் (108 நாட்அவுட்) அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது.
பின்னர் இந்தியா ‘ஏ’ அணி 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரகானே 87 பந்தில் 59 ரன்கள் சேர்த்தார். அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ஆட்டமிழக்காமல் 48 பந்தில் 57 ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ அணி 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரனகள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X