search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு: பிசிசிஐ அறிவிப்பு
    X

    தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றதால், தேர்வுக்குழுவில் உள்ள ஐந்து உறுப்பினர்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

    அதன்பின் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 எனக்கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி தொடரை வெற்றிகரமாக முடித்தது.

    இந்திய அணி சாதனைப் படைத்ததால் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை வழங்கியது. இந்நிலையில் சிறந்த அணிகளை தேர்வு செய்ததற்காக ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவினருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
    Next Story
    ×