search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்
    X

    ரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்

    ரோகித் சர்மா உடனான உறவை இங்கிலாந்து மாடல் அழகி தனது புத்தகத்தில் வெளிப்படுத்தியதால், அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். #RohitSharma
    இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. ரசிகர்களால் ‘ஹிட்மேன்’ என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நட்சத்திர தொடக்க பேட்ஸ்மேனான திகழ்கிறார்.

    ரோகித் சர்மா மாடல் அழகி ஒருவருடன் இணைந்து எடுத்த போட்டோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து மாடல் அழகியும், நடிகையுமான சோபியா ஹயாத், தனக்கும் ரோகித் சர்மாவிற்கும் இடையிலான உறவு குறித்து, அவர் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இது ரோகித் சர்மா ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சோபியா ஹயாத் தனது வாழ்வு குறித்து ஒரு புத்தகம் எழுதி வருகிறார். இதில் ரோகித் சர்மா உடனான நட்பு குறித்து தெரிவித்துள்ளார்.

    சோபியா ஹயாத் தனது புத்தகத்தில் ‘‘லண்டனில் உள்ள ஒரு கிளப்பில் ரோகித் சர்மாவை நான் சந்தித்தேன். நான் நடித்த ஒரு படம் முடிவடைந்ததை கொண்டாடி கொண்டிருந்தேன். அப்போது படத்தில் நடத்த ஒருவர் ரோகித் சர்மாவை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது என்னுடைய நண்பர் என்னிடம், இவர்தான் ‘ரோகித் சர்மா’ என்றார்.

    ஆனால், நான் கிரிக்கெட் அதிக அளவில் பார்ப்பதில்லை என்பதால், உண்மையிலேயே அவர் பற்றி நான் அறியவில்லை. எப்படி இருந்தாலும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம். உடனடியான கிளப்பின் அமைதியான இடத்திற்கு நகர்ந்தோம். அந்த இடத்தில் இருந்து விரைவாக சென்றோம். ரோகித் சர்மா எனக்கு முத்தம் கொடுத்தார். அது அழகான தருணம். அதன்பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து நடனமாடினோம்.

    ரோகித் சர்மா மிகவும் சிறந்த நபர். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் சந்தோசம் அடைந்தோம். சிறப்பாக நடிக்கவில்லை என்றால், ரசிகர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பது குறித்து அதிக அளவில் பேசினோம். அவர் மிகவும் பாதுகாப்பானவர்.

    ஓட்டல்களிலும், அறைகளிலும் நாங்கள் சேர்ந்து காணப்பட்டதால் ஊடகங்கள் எங்களை மோப்பம் பிடித்தது என்று நினைக்கிறேன். ஊடகங்களுக்கு சிலர் கசிய விட்டிருக்கலாம். ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக என்னுடைய மானேஜர் எனக்கு சுட்டிக் காட்டினார். ஆனால், எங்கள் உறவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதால், இது தொடர்பாக வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிப்பதை தவிர்த்து வந்தேன்.

    இதுபற்றி ரோகித் சர்மா மீடியாக்களிடம் திடீரென்று பேசினார். அப்போது என்னை ஜஸ்ட் ஒரு ரசிகர் என்றார். இது என்னை மிகவும் பாதித்தது. இதனால் அவருடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அவருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து தற்போது மாடல் அழகி செய்தியை வெளியிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கோபத்தில் மாடல் அழகியை மோசமான வார்த்தைகளால் திட்டிவருகின்றன.
    Next Story
    ×