search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடையாள அட்டை அணியாததால் பெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்
    X

    அடையாள அட்டை அணியாததால் பெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்

    அடையாள அட்டை அணியாததால் பாதுகாவலர் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரரை தடுத்து நிறுத்தினார். #AUSOpen #Federer
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீரரான ரோஜர் பெடரர் போட்டியில் பங்கேற்பதற்காக மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது அடையாள அட்டையை அணியாமல் சென்றார்.

    இதைப் பார்த்த பாதுகாவலர் ரோஜர் பெடரரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கூறி அவரை தடுத்து நிறுத்தினார். உடனே பெடரர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தனது அணியினர் அடையாள அட்டையை கொண்டு வருவதாக கூறி சிறிது நேரம் அங்கு காத்திருந்தார். பின்னர் அடையாள அட்டையை காண்பிடித்துவிட்டு மைதானத்திற்குள் சென்றார்.

    பிரபல வீரரான பெடரர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட விதத்தை இணைய தளத்தில் பலர் பாராட்டியுள்ளனர்.
    Next Story
    ×