என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்
லண்டன்:
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியதாவது:-
டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள்.
ஆகவே தான் டோனி ஆடும் வரை அவரது ஆட்டத்தை ரசியுங்கள் என்று நான் இந்தியர்களிடம் சொல்கிறேன். அவர் இல்லையென்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.
ரிசப்பன்ட் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் விளையாட்டுக்கு ஒரு தூதராக நீண்டகாலம் இருப்பது போல் இன்னொருவர் உருவாவது கடினம்.
ரிசப்பன்டின் ஹீரோ டோனி தான். ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறார். டெஸ்ட் தொடரின் போது அவர் டோனியிடம் நிறைய பேசியுள்ளார் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய விஷயமாகும்.
இதேபோல வீராட் கோலி- டோனி இடையேயான பரஸ்பர மரியாதை நம்ப முடியாத ஒன்றாகும். இதனால் ஓய்வு அறையில் எனது பணி எளிதாகிறது.
வீரர்களின் ஆட்டத்தில் நான் அதிகம் தலையீடுவது இல்லை. தேவைப்பட்டால் சில வேளைகளில் ஆலோசனை வழங்குவேன்.
ஒரு வீரர் எதை பார்த்து பயப்படுகிறார் என்றால் நான் தலையில் தட்டி சரி செய்வேன். இந்த விஷயத்தில் நான் மோசமானவன். இல்லையென்றால் நான் பயிற்சியாளராக இருக்க முடியாது.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார். #AUSvIND #dhoni #RaviShastri
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்