என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலி உடற்தகுதியுடன் இருந்தால் 100 சதங்கள் அடிப்பார்: அசாருதீன்
Byமாலை மலர்16 Jan 2019 8:55 AM GMT (Updated: 16 Jan 2019 10:31 AM GMT)
இந்திய அணி கேப்டன் எந்தவித காயமும் இல்லாமல் ‘ஃபிட்’ ஆக இருந்தால் 100 சதங்கள் அடிப்பார் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். #ViratKohli
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டியில் தனது 39-வது சதத்தை பதிவு செய்தார். விராட் கோலி ‘ஃபிட்’ ஆக இருந்தால் 100 சதங்கள் அடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘விராட் கோலியை போன்று தொடர்ச்சியாக விளையாடுவது சில வீரர்களால் மட்டுமே முடியும். உடற்தகுதியோடு, எந்தவித காயமின்றி விராட் கோலியால் விளையாட முடியும் என்றால், அவரால் 100 சதங்கள் அடிக்க முடியும். தற்போது உலகில் உள்ள வீரர்களை விட அதிக அளவில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் திறமையை விராட் கோலி பெற்றுள்ளார்.’’ என்றார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டியில் தனது 39-வது சதத்தை பதிவு செய்தார். விராட் கோலி ‘ஃபிட்’ ஆக இருந்தால் 100 சதங்கள் அடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘விராட் கோலியை போன்று தொடர்ச்சியாக விளையாடுவது சில வீரர்களால் மட்டுமே முடியும். உடற்தகுதியோடு, எந்தவித காயமின்றி விராட் கோலியால் விளையாட முடியும் என்றால், அவரால் 100 சதங்கள் அடிக்க முடியும். தற்போது உலகில் உள்ள வீரர்களை விட அதிக அளவில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் திறமையை விராட் கோலி பெற்றுள்ளார்.’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X