search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது
    X

    ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது

    ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் யுஏஇ, பக்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. #AsianCupfootball
    சார்ஜா

    4 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது. 

    இந்த நிலையில் தரவரிசையில் 97-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113-ம் நிலை அணியான பக்ரைன் அணியுடன் நேற்று மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், பக்ரைன் அணி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்தியாவின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

    கூடுதல் நேரத்தில் பக்ரைன் வீரர் ஜமார் ரஷீத் அடித்த ஒரு கோல் வெற்றி கோலாக மாறியது. இந்திய அணி வெறும் 3 புள்ளிகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. யுஏஇ, பக்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. #AsianCupfootball
    Next Story
    ×