என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பதி ராயுடு பந்து வீச்சு ஆக்ஷனில் சந்தேகம்: பரிசோதனைக்கு 14 நாள் அவகாசம்
Byமாலை மலர்13 Jan 2019 12:38 PM GMT (Updated: 13 Jan 2019 12:38 PM GMT)
சிட்னி போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீசியபோது, அவரது பந்து வீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக போட்டி அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இந்தியா இறங்கியது.
கலீல் அகமது அதிக அளவில் ரன் கொடுத்தபோது, முகமது ஷமி கை வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பகுதி நேர பந்து வீச்சாளரான அம்பதி ராயுடுவை கேப்டன் விராட் கோலி பந்து வீச அழைத்தார்.
அம்பதி ராயுடு இரண்டு ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரது பந்து வீச்சு முறை ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக போட்டி நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை இந்திய அணி நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர்.
இன்னும் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் முடிவு வெளியாகும் வரை அவர் பந்து வீசலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளார். ஒருவேளை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றால், சர்வதேச போட்டியில் ராயுடுவால் பந்து வீச முடியாது.
இதற்குமுன் தவான் டெஸ்ட் போட்டியில் பந்து வீசும்போது, இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் தவான் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் பந்து வீசவில்லை என்ற முடிவை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலீல் அகமது அதிக அளவில் ரன் கொடுத்தபோது, முகமது ஷமி கை வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பகுதி நேர பந்து வீச்சாளரான அம்பதி ராயுடுவை கேப்டன் விராட் கோலி பந்து வீச அழைத்தார்.
அம்பதி ராயுடு இரண்டு ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரது பந்து வீச்சு முறை ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக போட்டி நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை இந்திய அணி நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர்.
இன்னும் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் முடிவு வெளியாகும் வரை அவர் பந்து வீசலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளார். ஒருவேளை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றால், சர்வதேச போட்டியில் ராயுடுவால் பந்து வீச முடியாது.
இதற்குமுன் தவான் டெஸ்ட் போட்டியில் பந்து வீசும்போது, இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் தவான் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் பந்து வீசவில்லை என்ற முடிவை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X