search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவரின் தவறான முடிவால் டோனி அவுட்: இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த சோகம்
    X

    நடுவரின் தவறான முடிவால் டோனி அவுட்: இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த சோகம்

    முக்கியமான கட்டத்தில் நடுவர் தவறான முடிவில் டோனி ஆட்டமிழந்தது, இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. #MSDhoni
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷிகர் தவான் (0), விராட் கோலி (3), அம்பதி ராயுடு (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 4 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். ரோகித் சர்மா நேரம் செல்லசெல்ல அதிரடியாக விளையாடினார். அதேசமயம் டோனி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டடார். இந்தியாவின் ஸ்கோர் 32.2 ஓவரில் 141 ரன்காக இருக்கும்போது பெரேன்டார்ப் வீசிய பந்தில் டோனி எல்பிடபிள்யூ மூலம் 96 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - டோனி ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

    டோனி அவுட்டானதை டெலிவிசன் ரீ-பிளேயில் பார்க்கும்போது, அவருக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. லெக் ஸ்டம்புக்கு வெளியே பந்து பிட்ச் ஆனது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்து பிட்ச் ஆனால், அது அவுட் இல்லை. ஆனால் டிஆர்எஸ் முறை இந்தியாவுக்கு முடிந்து விட்டதால் அப்பீல் செய்ய முடியாமல் போனது. ஏற்கனவே அம்பதி ராயுடு டிஆர்எஸ் முறையை விரயமாக்கி இருந்தார். இதனால் டோனி எதுவும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்ப நேரிட்டது.



    டோனி ஆட்டமிழக்கும்போது 106 பந்தில் 148 ரன்கள்தான் தேவைப்பட்டது. டோனி ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 12 ரன்னிலும், ஜடேஜா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ரோகித் சர்மாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆகவே ஒவ்வொரு பந்தையும் தூக்கியடிக்க முயற்சி செய்து, 133 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    டோனி 40 ஓவர் வரை நின்றிருந்தால் போட்டி இந்தியாவிற்கு சாதகமாக இருந்திருக்கும். நடுவர் தவறுதலாக அவுட் கொடுத்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடடது.
    Next Story
    ×