search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேவாக் சாதனையில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான்: மயாங்க் அகர்வால் சொல்கிறார்
    X

    சேவாக் சாதனையில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான்: மயாங்க் அகர்வால் சொல்கிறார்

    அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த விரேந்தர் சேவாக் செய்த சாதனைகளில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான் என தொடக்க பேட்ஸ்மேன் மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களான லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் சொதப்பியதால் 27 வயதான மயாங்க் அகர்வால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 76 ரன்களும், 2-வது இன்னிங்சில் 42 ரன்களும் விளாசினார்.

    சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் 77 ரன்கள் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கும் மயாங்க் அகர்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அவரை முன்னாள் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன சேவாக் உடன் சிலர் ஒப்பிடுகிறார்கள்.

    இந்நிலையில் சேவாக் செய்த சாதனைகளில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான் என்று மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மயாங்க் அகர்வால் கூறுகையில் ‘‘பொதுவாக நான் ஒரு வீரரை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லை. ஆனால், சேவாக் இந்திய கிரிக்கெட்டின் சிறப்பான வீரர்களில் ஒருவர். நான் களத்தில் இறங்கி என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவேன். என்ன வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதுகுறித்து நான் சொல்ல வேண்டுமென்றால், சேவாக் இந்திய அணிக்கு என்ன செய்தாரோ?, அதில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான்’’ என்றார்.
    Next Story
    ×