search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் பேட்டை தூக்கமாட்டேன்: விராட் கோலி
    X

    ஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் பேட்டை தூக்கமாட்டேன்: விராட் கோலி

    ஓய்விற்குப் பிறகு பிக் பாஷ் போன்ற டி20 லீக் தொடரில் விளையாடுவீர்களா? என்று கேட்டதற்கு, வாய்ப்பே இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடக்கிறது. ஒருவேளை பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான தடையை தளர்த்தினாலோ அல்லது ஓய்விற்குப் பிறகோ பிக் பாஷ் தொடரில் விளையாடுவீர்களா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு விராட் கோலி பதிலளித்து கூறுகையில் ‘‘எதிர்காலத்தில் என்னுடைய வாழ்க்கை எப்படி செல்லப்போகிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னால் முடியும் அளவிற்கு போதுமான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். உண்மையிலேயே எதிர்காலம் குறித்து நான் சிந்திக்கவே இல்லை.



    கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். எனது ஓய்வு குறித்து கருத்து கூற முடியாது. ஏனென்றால், திரும்பவும் பேட்டை எடுப்பது குறித்து சிந்திக்கவில்லை.

    என்னுடைய கிரிக்கெட் காலம் ஒருநாள் முடியும் என்றால், அதற்குள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் விளையாடியிருப்பேன். காரணம், அப்போது நான் முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பேன். ஆகவே, திரும்பவும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்புவதை நான் பார்க்கவில்லை. ஒருமுறை கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டால், அது முடிந்ததாகத்தான் இருக்கும். மீண்டும் அதே சூழ்நிலையை விரும்பமாட்டேன்’’ என்றார்.
    Next Story
    ×