search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான் நடைபெறும்: மார்ச் 23-ல் தொடங்குகிறது என பிசிசிஐ அறிவிப்பு
    X

    2019 ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான் நடைபெறும்: மார்ச் 23-ல் தொடங்குகிறது என பிசிசிஐ அறிவிப்பு

    ஐபிஎல் 2019 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும், மார்ச் 23-ல் போட்டி தொடங்கும் என்று நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன் வெற்றிகரமான முடிவடைந்துள்ளன. 12-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர் தென்ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐபிஎல் தொடர் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது.

    இந்த முறை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் 23-ந்தேதி தொடங்குகிறது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
    Next Story
    ×