search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி ஒருநாள் போட்டியில் 115 ரன்னில் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து
    X

    கடைசி ஒருநாள் போட்டியில் 115 ரன்னில் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து

    இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, 3-0 என ஒயிட்வாஷும் செய்தது. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ராஸ் டெய்லர் (137), ஹென்ரி நிக்கோல்ஸ் (124 அவுட்இல்லை) ஆகியோரின் சதத்தால் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது.


    ராஸ் டெய்லர்

    பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா (46), தனஞ்ஜயா டி சில்வா 36 ரன்களும், குசால் பேரேரா 43 ரன்களும் சேர்த்தனர். இதனால் இலங்கை அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது.


    சதம் அடித்த நிக்கோல்ஸ்

    ஆனால் குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், தசுன் ஷனகா 2 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை தடுமாற ஆரம்பித்தது. திசாரா பேரேரா 63 பந்தில் 80 ரன்களும், தனுஷ்கா குணதிலகா 31 ரன்களும் எடுக்க இலங்கை 41.4 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    திசாரா பெரேரா

    இதனால் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது. ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.
    Next Story
    ×