search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட் போட்டி - மழையால் ஆட்டம் பாதிப்பு
    X

    டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட் போட்டி - மழையால் ஆட்டம் பாதிப்பு

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உணவு இடைவேளை முடிந்து போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில் போட்டி  டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. #AUSvIND

    Next Story
    ×