என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய பந்து வீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம்
Byமாலை மலர்30 Dec 2018 6:39 AM GMT (Updated: 30 Dec 2018 6:39 AM GMT)
மெல்போர்ன் டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்திய பந்து வீச்சாளர்களை ஆஸி. கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை இந்தியா 151 ரன்னில் சுருட்டியது.
இந்நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் நாங்கள் சில முன்னேற்றங்கள் அடைந்தோம். ஆனால் மொல்போர்னில் ஏமாற்றமே மிஞ்சியது. நாங்கள் சில உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறோம். சிட்னி தொடருக்கு முன் சில நேர்மறையான வழிகளைத் தேட வேண்டியது அவசியமானது.
எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டர் குறித்து சிறு ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் சிட்னி சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, நாங்கள் சிறந்த பார்முலாவை முடிவு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் குறித்து சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் சிறப்பானதுதான்.
இந்தத் தொடரில் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சு எப்போதும் தரமாகத்தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருடைய முயற்சியை பார்க்க வேண்டும். அவரைப்போன்று மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் நாங்கள் சில முன்னேற்றங்கள் அடைந்தோம். ஆனால் மொல்போர்னில் ஏமாற்றமே மிஞ்சியது. நாங்கள் சில உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறோம். சிட்னி தொடருக்கு முன் சில நேர்மறையான வழிகளைத் தேட வேண்டியது அவசியமானது.
எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டர் குறித்து சிறு ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் சிட்னி சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, நாங்கள் சிறந்த பார்முலாவை முடிவு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் குறித்து சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் சிறப்பானதுதான்.
இந்தத் தொடரில் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சு எப்போதும் தரமாகத்தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருடைய முயற்சியை பார்க்க வேண்டும். அவரைப்போன்று மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X