என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அகர்வாலின் முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கண்டனம்
Byமாலை மலர்30 Dec 2018 6:01 AM GMT (Updated: 30 Dec 2018 6:01 AM GMT)
மயாங்க் அகர்வாலின் ரஞ்சி கிரிக்கெட்டின் முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
மெல்போர்ன் டெஸ்டில் மிகவும் கடினமான சூழலில் இந்திய அறிமுக வீரர் மயாங்க் அகர்வால் முதல் இன்னிங்சில் அரைசதம் விளாசினார். ஆனால் அவர் குறித்து வர்ணனையாளரான ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கெர்ரி ஓ’கீபே இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘‘மயாங்க் அகர்வால் ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம் அடித்திருப்பதாக அறிகிறேன். அது ஜலந்தர் ரெயில்வே கேன்டீன் ஊழியர்கள் லெவன் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டதாக இருக்கும்’’ என்றார். அவரது பேச்சு இந்திய அணி நிர்வாகத்தை கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.
கெர்ரி ஓ’கீபே கருத்து குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘‘காயப்படுத்தும்படியான ஒரு கருத்து இது. ஆனால் இவ்வாறு சிலர் கூறும்போது ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களால் பாதிக்கப்படும்போது களத்தில் சிறப்பாக செயல்படுவதுதான் அதற்கு எல்லாம் சரியான பதிலாக இருக்கும். இது குறித்து அதிகாரபூர்வமாக புகார் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை’’ என்றார்.
இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்போது, ‘‘கெர்ரிக்காக அகர்வாலிடம் ஒரு திட்டம் உள்ளது. அதாவது நீங்கள் (கெர்ரி) கேன்டீன் திறக்கும்போது அகர்வால் அங்கு வந்து காபியை முகர்ந்து பார்ப்பார். அதை இந்திய காபியுடன் ஒப்பிடுவார். உங்களது காபி சிறந்ததா? அல்லது எங்கள் நாட்டின் காபி சிறந்ததா? என்பதை அவர் முடிவு செய்வார்’’ என்று பதிலடி கொடுத்தார்.
கெர்ரி ஓ’கீபேவை, சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தனது கருத்துக்கு, கெர்ரி ஓ’கீபே மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘‘மயாங்க் அகர்வால் ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம் அடித்திருப்பதாக அறிகிறேன். அது ஜலந்தர் ரெயில்வே கேன்டீன் ஊழியர்கள் லெவன் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டதாக இருக்கும்’’ என்றார். அவரது பேச்சு இந்திய அணி நிர்வாகத்தை கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.
கெர்ரி ஓ’கீபே கருத்து குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘‘காயப்படுத்தும்படியான ஒரு கருத்து இது. ஆனால் இவ்வாறு சிலர் கூறும்போது ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களால் பாதிக்கப்படும்போது களத்தில் சிறப்பாக செயல்படுவதுதான் அதற்கு எல்லாம் சரியான பதிலாக இருக்கும். இது குறித்து அதிகாரபூர்வமாக புகார் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை’’ என்றார்.
இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்போது, ‘‘கெர்ரிக்காக அகர்வாலிடம் ஒரு திட்டம் உள்ளது. அதாவது நீங்கள் (கெர்ரி) கேன்டீன் திறக்கும்போது அகர்வால் அங்கு வந்து காபியை முகர்ந்து பார்ப்பார். அதை இந்திய காபியுடன் ஒப்பிடுவார். உங்களது காபி சிறந்ததா? அல்லது எங்கள் நாட்டின் காபி சிறந்ததா? என்பதை அவர் முடிவு செய்வார்’’ என்று பதிலடி கொடுத்தார்.
கெர்ரி ஓ’கீபேவை, சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தனது கருத்துக்கு, கெர்ரி ஓ’கீபே மன்னிப்பு கேட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X