search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
    X

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட் 18-ந்தேதி முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் இன்று மெல்போர்னில் பயிற்சியை தொடங்கினார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதனால் தொடர் 1-1 சமநிலையில் உள்ளது.



    பெர்த் டெஸ்ட் கடந்த 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்றது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் 3-வது போட்டி மெல்போர்னில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இரண்டு டெஸ்டிற்கும் இடையில் சுமார் 8 நாட்கள் இடைவெளி உள்ளது.



    18-ந்தேதி பெர்த்தில் முடிந்த டெஸ்டிற்குப்பின் இந்தியா பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டனர். மெல்போர்ன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்தியா இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புள்ளது.
    Next Story
    ×