என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிசிசிஐ.யிடம் ரூ.160 கோடி வரி சலுகை கேட்டு மிரட்டும் ஐசிசி
Byமாலை மலர்22 Dec 2018 10:54 AM GMT (Updated: 22 Dec 2018 10:54 AM GMT)
கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வரி சலுகையாக 160 கோடி ரூபாயை பிசிசிஐ தரவேண்டும் என ஐசிசி நெருக்கடி கொடுத்து வருகிறது. #BCCI #ICC #T20
மும்பை:
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தப் போட்டி தொடரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வரி சலுகை தரவேண்டும் என்று கோரியது.
இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் வரி சலுகை தொகை விரைவில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வரி சலுகை தொகையான ரூ.160 கோடியை வரும் 30-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என்று ஐ.சி.சி. உத்தரவிட்டு உள்ளது.
அப்படி செலுத்தாத பட்சத்தில் நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்படும் வருவாயில் கழித்துக் கொள்ளப்படும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. மேலும் இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023-ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. #BCCI #ICC #T20
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X