என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனி ரஞ்சி டிராபியில் விளையாடினால் இளைஞர் ஒருவருக்கு இடம் கிடைக்காது: ஜார்க்கண்ட் பயிற்சியாளர்
Byமாலை மலர்20 Dec 2018 10:20 AM GMT (Updated: 20 Dec 2018 10:20 AM GMT)
டோனி ரஞ்சி டிராபியில் விளையாடினால் ஒரு இளைஞர் வெளியே இருக்க வேண்டியதிருக்கும் என ஜார்க்கண்ட் பயிற்சியாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். #MSDhoni
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் டோனி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். சமீப காலமாக டோனியின் பேட்டிங் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. மேலும், டோனிக்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைக்கிறது. இதைபயன்படுத்தி பேட்டிங் திறமையை சிறப்பாக வைத்துக்கொள்ள டோனி உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் அணிக்காக டோனி விளையாடினால் ஒரு இளைஞர் வெளியே இருக்க வேண்டியதிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பயிற்சியாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் அணி பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உள்ளூர் தொடரில் விளையாடாதது குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால், அவர் ஜார்க்கண்ட் அணியில் இணைந்து விளையாடினால், ஒரு இளைஞர் வெளியில் இருக்க வேண்டியதிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எம்எஸ் டோனி இந்த செயலை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?. ஜார்க்கண்ட் அணி ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து, அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. டோனி நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினால், அது நியாயமானதாக இருக்காது.
டோனி ராஞ்சியில் இருக்கும்போதெல்லாம் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் வந்து இளைஞர்களுக்கு டிப்ஸ் வழங்குகிறார். இது இளைஞர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் அணிக்காக டோனி விளையாடினால் ஒரு இளைஞர் வெளியே இருக்க வேண்டியதிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பயிற்சியாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் அணி பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உள்ளூர் தொடரில் விளையாடாதது குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால், அவர் ஜார்க்கண்ட் அணியில் இணைந்து விளையாடினால், ஒரு இளைஞர் வெளியில் இருக்க வேண்டியதிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எம்எஸ் டோனி இந்த செயலை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?. ஜார்க்கண்ட் அணி ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து, அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. டோனி நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினால், அது நியாயமானதாக இருக்காது.
டோனி ராஞ்சியில் இருக்கும்போதெல்லாம் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் வந்து இளைஞர்களுக்கு டிப்ஸ் வழங்குகிறார். இது இளைஞர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X