search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை: வருண் சக்கரவர்த்தி பேட்டி
    X

    8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை: வருண் சக்கரவர்த்தி பேட்டி

    8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை என சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #IPLAuction2018
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. 20 லட்சம் ரூபாயான அடிப்படை விலையில் இருந்து அவரது தொகை பல மடங்கு உயர்ந்தது. இறுதியில் 42 மடங்கு அதிகரித்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே எதிர்பார்க்கவில்லையாம். இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறுகையில் ‘‘8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை. அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கே ஏலம் போவேன் என்று நினைத்தேன்.



    பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் உள்ளதால், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்க்கு கிடைத்துள்ளது. சர்வதேச வீரர்கள் இருப்பதால் சவால்கள் நிறைந்திருக்கும. பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பந்து வீச்சை என்னிடம் எதிர்பார்க்கலாம்’’ என்றார்.
    Next Story
    ×