என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானுக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்ட்: பிலாண்டர் காயத்தால் விலகல்
Byமாலை மலர்17 Dec 2018 11:49 AM GMT (Updated: 17 Dec 2018 11:49 AM GMT)
பாகிஸ்தானுக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிலாண்டர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #SAvPAK
பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் போட்டியை ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படும்.
இந்த டெஸ்டிற்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன. தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லுங்கி நிகிடி காயத்தால் இடம்பெறவில்லை. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் நிகிடி பிப்ரவரியில்தான் சர்வதேச போட்டிக்கு திரும்புவார்.
மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிலாண்டருக்கு கை விரலில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது. தற்போது காயம் குணமடையாததால் பிலாண்டர் முதல் டெஸ்டில் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா ஆலிவர், ரபாடா, ஸ்டெயின் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க உள்ளது.
இந்த டெஸ்டிற்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன. தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லுங்கி நிகிடி காயத்தால் இடம்பெறவில்லை. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் நிகிடி பிப்ரவரியில்தான் சர்வதேச போட்டிக்கு திரும்புவார்.
மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிலாண்டருக்கு கை விரலில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது. தற்போது காயம் குணமடையாததால் பிலாண்டர் முதல் டெஸ்டில் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா ஆலிவர், ரபாடா, ஸ்டெயின் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X