search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை
    X

    பெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை

    பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா கோலியின் சதம் மற்றும் ரகானேயின் அரை சதத்தால் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் அவுட்டானார். அடுத்து இறங்கிய உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடினார்.



    மறுபுறம் ஷான் மார்ஷ் 5 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னுடனும் அவுட்டாகினர். ஆரோன் பிஞ்ச் காயமடைந்து ரிடயர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவாஜா 41 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்தியா சார்பில் மொகமது ஷமி 2 விக்கெட்டும், பும்ரா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #AUSvIND
    Next Story
    ×