search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவரின் முடிவை மறுபரீசிலனை செய்யும் டி.ஆர்.எஸ்.முறை ஏமாற்றம் அளிக்கிறது - ஆஸ்திரேலிய கேப்டன்
    X

    நடுவரின் முடிவை மறுபரீசிலனை செய்யும் டி.ஆர்.எஸ்.முறை ஏமாற்றம் அளிக்கிறது - ஆஸ்திரேலிய கேப்டன்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில் நுட்பம் சரியானதல்ல என ஆஸ்திரேலியா கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #TimPaine
    அடிலெய்ட்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிம்பெய்ன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடுவரின் முடிவை மறுபரீசிலனை செய்யும் டி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் சரியானதல்ல. இந்த தொழில் நுட்பத்தில் எனக்கு பதில்கள் கிடைக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    எல்லோருக்கும் இது ஏமாற்றம் அளிப்பதாகவே நான் கருதுகிறேன். டி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்தில் பந்துகள் ஸ்டெம்புக்கு மேலே செல்வதாகவே காட்டுகிறது. ஆனால் உண்மையிலேயே அதுபோன்று நடக்காது என்பது எனக்கு தெரியும்.



    நாதன்லயன் பந்தின் உயரம் குறித்து தகவல்களை தருகிறார். நீங்கள் எல்லோருடைய தகவல்களையும் எடுத்துக் கொண்டு முடிவுகளை கொடுக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு 2 முறை தவறான தீர்ப்பு கிடைத்தது.

    மிச்சேல் ஸ்டார்க் நல்ல பார்மில் இருந்தால் அவரைவிட உலகில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யாருமில்லை. பெர்த் மைதானத்தில் அவருக்கு மிகவும் உகர்ந்ததாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் டெஸ்டில் இந்திய வீரர் ரகானே கேட்ச் ஆனதாக நடுவர் தீர்ப்பு வழங்கினார். டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தபோது பேட்டில் படவில்லை என்பது தெரிந்தது. இதனால் அவுட் முடிவு திரும்ப பெறப்பட்டது.

    இதேபோல் புஜாராவுக்கு கொடுக்கப்பட்ட 2 அவுட்டுகள் டி.ஆர்.எஸ். முறையில் திரும்ப பெறப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி தான் ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #TimPaine
    Next Story
    ×