search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்
    X

    2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்

    ஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 11-வது சீசன் முடிந்து கடந்த மாதம் வரை வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை நடைபெற்றது.

    இதில் தவான், டி காக் உள்பட பல்வேறு வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் 2019 சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடரின்போது அதிரடி காட்டிய இளம் வீரர் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×