search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம்- ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சொல்கிறார்
    X

    மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம்- ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சொல்கிறார்

    ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகிய மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது தொடரை 0-2 என இழந்தாலும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும்.

    அதிலிருந்து தற்போது வரை விராட் கோலி நம்பமுடியாத வகையில் விளையாடி வருகிறார். ஏராளமான சாதனைகளை உடைத்தெறிந்துள்ளார். தற்போதும் விராட் கோலி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கட்டுப்படுத்துவார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஆன டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் விராட் கோலியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரை சந்தித்த வரையில், அவர்கள் எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். விராட் கோலிக்கு போதுமான அளவு நெருக்கடி கொடுக்க இவர்களால முடியும். எல்லோருமே இந்த உலகத்தில் மனிதர்கள்தானே.

    விராட் கோலி சிறந்த வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை முதன்முதலாக பெங்களூருவில் பார்த்தேன். மிகவும் சிறப்பான வீரர். ஆனால், அவர் வீழ்த்தும் அளவிற்கான பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம். மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சு குழு. மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது. நாங்கள் இந்தியாவை வீழ்த்தி போட்டியில் முன்னணி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×