search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பந்த் அவுட்டுதான் தோல்விக்கான திருப்பு முனை- விராட் கோலி
    X

    ரிஷப் பந்த் அவுட்டுதான் தோல்விக்கான திருப்பு முனை- விராட் கோலி

    ரிஷப் பந்த் அவுட்டுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க பேட்ஸ்மேன் தவான் 42 பந்தில் 76 ரன்கள் குவித்த போதிலும் ரோகித் சர்மா (7), லோகேஷ் ராகுல் (13), விராட் கோலி (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ரன்குவிப்பு ஸ்தம்பித்தது. பின்னர் ரிஷப் பந்த் - தினேஷ் கார்த்திக் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 10 பந்தில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸ்விப் மூலம் ஆட்டமிழந்தார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    பிரிஸ்பேன் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற போட்டி. இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள்.



    நாங்கள் சிறப்பான வகையில் பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொதப்பியதால் ரன் குவிப்பு ஸ்தம்பித்தது. இறுதியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கும்போது வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் மீண்டும் பின்தங்கிவிட்டோம்.

    தொடக்க பேட்ஸ்மேன்களில் தவான் மிகவும் ஸ்டிராங்கான வீரர். இதுவரை டி20யில் சதம் அடிக்காவில்லை. ஆனால், அவரது ஆட்டம் உண்மையிலேயே அணிக்கு பலன் தருவதாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×