search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக் - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது பாட்னா
    X

    புரோ கபடி லீக் - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது பாட்னா

    புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ் அணி தனது ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    மும்பை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 18 - 17 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பாட்னா அணிக்கு டெல்லி அணி வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

    இறுதியில், பரபரப்பான கட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 38 - 35 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பாட்னா அணி ஆறாவது வெற்றியை பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi 
    Next Story
    ×