என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடியோக்களை பார்த்து ஆஸி. தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்- முகமது ஷமி
Byமாலை மலர்12 Nov 2018 2:21 PM GMT (Updated: 12 Nov 2018 2:21 PM GMT)
வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். #AUSvIND
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் முகமது ஷமி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்திய போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளத்தை போன்று ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் அதிக அளவில் ஸ்விங் இருக்காது. ஆனால் பவுன்சர், ரிவர்ஸ் ஸ்விங் இருக்கும்.
இதனால் முகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த ஷர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீச, வீடியோக்களை பார்த்து தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடர் குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சுக்குழு இங்கிலாந்தில் சிறப்பாக பந்து வீசினோம். ஏராளமான வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். எதிரணி மிகவும் வலுவாக உள்ளதால், முடிந்த வகையில் தொடர் முழுவதும் கவனம் செலுத்துவதுதான் திட்டம். சரியான லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றில் துல்லியமாக பந்து வீச முயற்சி செய்வோம்.
எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். வெற்றி அல்லது தோல்வி அதிர்ஷ்டத்தை சார்ந்தது. 100 சதவீத பங்களிப்பை வெளிப்படுத்துவோம். ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் விளையாடவில்லை என்றால், ஆஸ்திரேலியா அணி உண்மையிலேயே பலவீனமான அணியாகத்தான் இருக்கும். ஆனால், நம்முடைய திட்டத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’’ என்றார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளத்தை போன்று ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் அதிக அளவில் ஸ்விங் இருக்காது. ஆனால் பவுன்சர், ரிவர்ஸ் ஸ்விங் இருக்கும்.
இதனால் முகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த ஷர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீச, வீடியோக்களை பார்த்து தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடர் குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சுக்குழு இங்கிலாந்தில் சிறப்பாக பந்து வீசினோம். ஏராளமான வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். எதிரணி மிகவும் வலுவாக உள்ளதால், முடிந்த வகையில் தொடர் முழுவதும் கவனம் செலுத்துவதுதான் திட்டம். சரியான லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றில் துல்லியமாக பந்து வீச முயற்சி செய்வோம்.
எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். வெற்றி அல்லது தோல்வி அதிர்ஷ்டத்தை சார்ந்தது. 100 சதவீத பங்களிப்பை வெளிப்படுத்துவோம். ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் விளையாடவில்லை என்றால், ஆஸ்திரேலியா அணி உண்மையிலேயே பலவீனமான அணியாகத்தான் இருக்கும். ஆனால், நம்முடைய திட்டத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X