search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும்- ராகுல் டிராவிட்
    X

    வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும்- ராகுல் டிராவிட்

    உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. வெளிநாட்டு மண்ணில் இன்னும் முன்னேற்றம் தேவை என டிராவிட் தெரிவித்துள்ளார். #Dravid
    உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இத்தொடர் நடக்கிறது. உலகக்கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இந்தியா சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து போன்ற சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் இதுபோன்ற கண்டிசனில் விளையாடும்போது அனுபவம் முக்கியமானது.



    ஒயிட் பந்தில் சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை மனதில் வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது.

    ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவது சிறந்தமுறையில் தயார் ஆவதற்கு உதவும். ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டு மண்ணில் நாம் இன்னும் சிறப்பான வகையில் முன்னேற்றம் காண வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×