என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய நியூசிலாந்து ஜோடி- ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் சாதனை
Byமாலை மலர்7 Nov 2018 10:29 AM GMT (Updated: 7 Nov 2018 10:29 AM GMT)
நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து பந்து வீச்சாளர் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். #CricketRecord
நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான ‘ஃபோர்டு டிராபி’யில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் - சென்டிரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. நார்தன் அணியின் ஜோ கார்ட்டர், பிரெட் ஹாம்ப்டன் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.
சென்டிரல் அணியின் வில்லெம் லடிக் தனது கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹாம்ப்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இரண்டு பந்துகளும் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார்.
கடைசி மூன்று பந்துகளையும் கார்ட்டர் சிக்சருக்கு தூககினார். இதனால் வில்லெம் லடிக் 43 ரன்கள் வாரிக்கொடுத்து ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் வங்காள தேசத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக்கில் அலாவுதீன் பாபு 39 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஜிம்பாப்வேயின் கேப்டன் எல்டர் சிகும்புரா ஏழு பந்தில் நான்கு சிக்சர்ஸ், மூன்று பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
சென்டிரல் அணியின் வில்லெம் லடிக் தனது கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹாம்ப்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இரண்டு பந்துகளும் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார்.
கடைசி மூன்று பந்துகளையும் கார்ட்டர் சிக்சருக்கு தூககினார். இதனால் வில்லெம் லடிக் 43 ரன்கள் வாரிக்கொடுத்து ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் வங்காள தேசத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக்கில் அலாவுதீன் பாபு 39 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஜிம்பாப்வேயின் கேப்டன் எல்டர் சிகும்புரா ஏழு பந்தில் நான்கு சிக்சர்ஸ், மூன்று பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X