search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து - கேரளா, புனே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து - கேரளா, புனே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் புனே அணியின் மார்கோ ஸ்டன்கோவிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் புனே அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நிகோலா கிரெம்வரிக் ஒரு கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார். 

    இறுதியில், எப்.சி. புனே சிட்டி அணி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1- 1 என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் புள்ளிப் பட்டியலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    Next Story
    ×