search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
    X

    2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

    துபாயில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் கடந்த 24-ந்தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பாபர் ஆசம் (45), முகமகது ஹபீஷ் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

    பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது, டிஆர்கி ஷார்ட் (2), ஆரோன் பிஞ்ச் (3), கிறிஸ் லின் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.



    இதனால் ஆஸ்திரேலியா ரன் குவிக்க திணறியது. மேக்ஸ்வெல் மட்டும் தாக்குப்பிடித்து 37 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 21 ரன்னும், கவுல்டர்-நைல் 27 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியாவால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடர 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நாளை நடக்கிறது.
    Next Story
    ×