search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 போட்டியில் 105 ரன்கள் குவித்து இந்திய வீராங்கனை மிதலி ராஜ் சாதனை
    X

    டி20 போட்டியில் 105 ரன்கள் குவித்து இந்திய வீராங்கனை மிதலி ராஜ் சாதனை

    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 105 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் மிதலி ராஜ். #MithaliRaj
    இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீராங்கனையும், இந்திய பெண்கள் அணியின் அனுபவம் வாயந்தவரும் ஆன மிதலி ராஜ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த, மிதலி ராஜ், 59 பந்தில் சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிரிதி 102 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது மிதலி ராஜ் முறியடித்துள்ளார்.
    Next Story
    ×