search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன்குமார் ஓய்வு
    X

    இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன்குமார் ஓய்வு

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார் சர்வதேச கிரிக்கெட் உள்பட அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். #PraveenKumar #indiacricketteam

    மீரட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார் சர்வதேச கிரிக்கெட் உள்பட அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 32 வயதான பிரவீன்குமார் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக அவர் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார்.

    அதன்பிறகு அவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப், பெங்களூர், ஐதராபாத் அணிகளில் விளையாடினார்.

    இந்த நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். பிரவீன்குமார் 6 டெஸ்டில் விளையாடி 27 விக்கெட்டும், 68 ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

    “ஓய்வு பெறுவது பற்றி நான் வருத்தப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்த விரும்ப வில்லை.

    எனது விளையாட்டு காலம் முடிந்து விட்டது. அதை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். கடவுள் எனக்கு கொடுத்த இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    எதிர்காலத்தில் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #PraveenKumar #indiacricketteam

    Next Story
    ×