என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை
Byமாலை மலர்16 Oct 2018 10:14 AM GMT (Updated: 16 Oct 2018 10:14 AM GMT)
நடுவரை நோக்கி தகாத வார்த்தைகள் கூறியதால் வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளருக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது தொடக்க வீரர் பொவேல் அஸ்வின் பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பந்தை தரையில் உரசியது மாதிரி தெரிந்தது. ஆனால் டிவி நடுவர் விக்கெட் கொடுத்துவிட்டார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கடும் கோபம் அடைந்தார்.
அத்துடன் டிவி அம்பயரின் அறைக்குச் சென்று முறையற்ற வார்த்தைகளை கூறி வாக்குவாதம் செய்தார். அத்துடன் நிற்காமல் 4-வது நடுவரிடமும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்டூவர்ட் லா மீது கள நடுவர்கள் ப்ரூஸ் ஆக்சன்போர்டு, இயன் குட், 3-வது நடுவர் நிகெல் லாங், 4-வது நடுவர் நித்தின் மேனன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டூவர்ட் லா ஐசிசியின் விதிமுறையை மீறியதாக, அவருக்கு 100 சதவீதம் அபராதத்துடன் தடைக்கான மூன்று புள்ளிகளுடன் வழங்கப்பட்டது.
ஏற்கனவே 2017-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின்போது 25 சதவீதத்துடன், தடைக்கான ஒரு புள்ளியையும் பெற்றிருந்தார். தற்போது இந்த புள்ளிகள் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு உள்ளதால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டூவர்ட் லா இந்தியாவிற்கு எதிராக 21 மற்றும் 24-ந்தேதி நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்க இயலாது.
அத்துடன் டிவி அம்பயரின் அறைக்குச் சென்று முறையற்ற வார்த்தைகளை கூறி வாக்குவாதம் செய்தார். அத்துடன் நிற்காமல் 4-வது நடுவரிடமும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்டூவர்ட் லா மீது கள நடுவர்கள் ப்ரூஸ் ஆக்சன்போர்டு, இயன் குட், 3-வது நடுவர் நிகெல் லாங், 4-வது நடுவர் நித்தின் மேனன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டூவர்ட் லா ஐசிசியின் விதிமுறையை மீறியதாக, அவருக்கு 100 சதவீதம் அபராதத்துடன் தடைக்கான மூன்று புள்ளிகளுடன் வழங்கப்பட்டது.
ஏற்கனவே 2017-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின்போது 25 சதவீதத்துடன், தடைக்கான ஒரு புள்ளியையும் பெற்றிருந்தார். தற்போது இந்த புள்ளிகள் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு உள்ளதால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டூவர்ட் லா இந்தியாவிற்கு எதிராக 21 மற்றும் 24-ந்தேதி நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்க இயலாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X